மலேசியாவின் MRT நிலையத்தில் பெண்ணைத் தாக்கி வழிப்பறி
மலேசியாவின் தமான் முத்தியாரா (Taman Mutiara) MRT நிலையத்தில் 48 வயது பெண்ணைக் கொள்ளைக்காரர் ஒருவர் கடுமையாகக் குத்தி உதைத்து தாக்கியிருக்கிறார்.
மலேசியாவின் தமான் முத்தியாரா (Taman Mutiara) MRT நிலையத்தில் 48 வயது பெண்ணைக் கொள்ளைக்காரர் ஒருவர் கடுமையாகக் குத்தி உதைத்து தாக்கியிருக்கிறார்.
சென்ற வியாழக்கிழமை காலை 6.45 மணிக்கு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
தனியாக மின்தூக்கியில் இருந்த அந்தப் பெண்ணைத் தாக்கிவிட்டுக் கொள்ளைக்காரர் தப்பியோடியதாக மலேசியக் காவல் துறையினர் கூறினர்.
பலத்த காயமடைந்த அந்தப் பெண், தனது வங்கி அட்டைகள், அடையாள அட்டை, 400 ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றை இழந்ததாகக் கூறியிருக்கிறார்.
அந்தப் பெண் தாக்கப்பட்ட, கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
அது குறித்து மலேசியக் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.