வூஹானிலிருந்து நாடு திரும்பிய 66 மலேசியர்கள்
வூஹானிலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட மலேசியர்கள், சிறப்பு விமானத்தின்மூலம் தாய்நாடு திரும்பியுள்ளனர்.
வூஹானிலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட மலேசியர்கள், சிறப்பு விமானத்தின்மூலம் தாய்நாடு திரும்பியுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் உள்ள மலேசியர்களை அழைத்துவர, AirAsia விமானம் ஒன்று தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பிள்ளைகள் உள்பட மொத்தம் 66 பேர் நேற்றுப் பின்னிரவு 1.45 மணியளவில் வூஹான் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இன்று காலை கோலாலம்பூர் சென்று சேர்ந்தனர்.
அதே விமானத்தில், 12 ஊழியர்கள், மலேசிய அரசாங்கப் பிரதிநிதிகள் 9 பேர், பெய்ச்சிங்கிலுள்ள மலேசியத் தூதரகத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் ஆகியோரும் பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்
என்றும், 14-நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.