இந்திய ஆகாயப் போக்குவரத்து, புதிய சாம்சுங் கைப்பேசிகக்ளுக்கான தடையை அகற்றியுள்ளது
விமானங்களில் சாம்சுங் கேலாக்ஸி நோட் 7 கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கும், கொண்டு செல்லவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடைகளை இந்தியா அகற்றியுள்ளது.
புதுடில்லி: விமானங்களில் சாம்சுங் கேலாக்ஸி நோட் 7 கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கும், கொண்டு செல்லவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடைகளை இந்தியா அகற்றியுள்ளது.
ஆனால், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் வாங்கப்பட்ட கைப்பேசிகளுக்கே அது பொருந்தும்.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பயணிகள் சாம்சுங் கேலக்ஸி நோட் 7 கைப்பேசிகளுக்கு மின்னூட்ட வேண்டாம் என்றும் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயணிகளை சிவில் ஆகாயப் போக்குவரத்து செயலகம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் சாம்சுங் நிறுவனம் இன்னும் கேலக்ஸி நோட் 7 கைப்பேசிகளை விற்பனை செய்ய ஆரம்பிக்கவில்லை.
விமானத்தில் மின்னேற்றம் செய்யவும் அதனைப் பயன்படுத்தவும் பாதுகாப்பாக உள்ளது என்பதைக் குறிக்கும் பச்சை பேட்டரி சின்னம் கொண்ட கைப்பேசிகளை மட்டுமே அது விற்பனை செய்யும் என சாம்சுங் நிறுவனம் கூறியது.