வரவுசெலவுத் திட்டம் 2021 - சமூகத்தின் பார்வை
COVID-19 கிருமிப்பரவல் சூழலில் பாதிக்கப்பட்ட தனிநபர்களும் வர்த்தகங்கள் உள்ளிட்ட இதர துறைகளும் விரைவில் மீண்டுவரும் இலக்கோடு அண்மையில் வெளியிடப்பட்டது வரவுசெலவுத் திட்டம் 2021.
COVID-19 கிருமிப்பரவல் சூழலில் பாதிக்கப்பட்ட தனிநபர்களும் வர்த்தகங்கள் உள்ளிட்ட இதர துறைகளும் விரைவில் மீண்டுவரும் இலக்கோடு அண்மையில் வெளியிடப்பட்டது வரவுசெலவுத் திட்டம் 2021.
கலைத் துறையில் கிடைத்திருக்கும் ஆதரவுத் திட்டங்கள் தன்னைப் போன்றோருக்கு நன்மையளிக்கும் என்கிறார் மாயா நடனக் கலைக்கூடத்தின் கலை இயக்குநர் கவிதா கிருஷ்ணன்.
இந்த வருடத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. போன வருடம் கொடுத்த வாய்ப்புகள், கொடுத்த ஆதரவுகள் எங்களை மூழ்கடிக்காமல் கொண்டுபோய் இருக்கின்றன என்றுதான் சொல்லமுடியும். உறுதி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. எங்களுக்குக் கலை நிர்வாகப் பிரிவில் உதவி தேவைப்படுகிறது. அந்த ஆதரவை வைத்துப் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்க வாய்ப்புள்ளது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகள், தேவையுடையவர்களுக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் கூடுதல் ஆதரவு.
இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கும் வரவுசெலவுத் திட்டம் குறித்த சமூகத்தினரின் பார்வை பற்றி இன்றிரவு 9.30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் இடம்பெறும் எதிரொலி நிகழ்ச்சியில் பார்க்கலாம்.