கனத்த மழை... வெள்ளம்... ஞாபகம் வருதே...
இக்காலத்தில், சிங்கப்பூரில் வெள்ளம் பெருகுவது பலரும் எதிர்பார்க்காத ஒன்று.
இக்காலத்தில், சிங்கப்பூரில் வெள்ளம் பெருகுவது பலரும் எதிர்பார்க்காத ஒன்று.
அதனால், வெள்ளம் பெருகும்போது, பலரும் அதற்கு ஆயத்தமாக இருப்பதில்லை. அதுபோன்ற பேரிடர் நேர்ந்தால், பலரும் அதிர்ச்சியடைவதைக் காண முடிகிறது.
சிங்கப்பூரின் கடந்த காலத்தில், வெள்ளம் குறித்து மக்களின் மனப்போக்கு சற்று மாறுபட்டிருந்தது. முன்பு, மழைக் காலங்களில் வெள்ளம் பெருகுவதை எதிர்பார்த்து சிலர் அதற்கு ஆயத்தமாவதும் வழக்கமாக இருந்தது.
1970களில் வெள்ள அபாயம் உள்ள தாழ்வான இடங்கள், இன்றைய காலத்தை விட அதிகமாக இருந்தன. முன்பு 320 ஹெக்டர் பரப்பளவில் இருந்த தாழ்வான இடங்கள் இன்று நகரமயமாதலால் 30.5 ஹெக்டருக்குக் குறைந்துள்ளது.