கிருமித்தொற்றைக் கண்டறிய உதவும் சுய பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்தத் தயாரா?
கிருமித்தொற்றைக் கண்டறிய உதவும் சுய பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்தத் தயாரா?
சிங்கப்பூரில் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
தேசிய தினத்திற்குள் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் கிருமித்தொற்றை உடனடியாகக் கண்டறிய கைகொடுக்கும் சுய பரிசோதனைக் கருவிகளும் இப்போது விற்பனைக்கு வந்துள்ளன.
ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கு எத்தனை பேர் முன்வருகிறார்கள்?
அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற குறிப்புகள் இருந்தாலும் அது 100% சரியான முடிவைத்தான் கொடுக்குமா எனத் தெரியாது.அதனால் மருத்துவரைப் பார்த்து விரைவுப் பரிசோதனை செய்வதே சிறந்தது
-இந்திராணி
தடுப்பூசிகளைப் போலவே இந்த சுய பரிசோதனைக் கருவிகளின் செயல்திறன் என்னவென்று தெரிந்தால் அதை நான் கண்டிப்பாகப் பயன்படுத்துவேன்
- செல்வன்
சுய பரிசோதனைக் கருவிகளின் செயல்திறன், அதை யாரெல்லாம் பயன்படுத்தலாம் போன்ற பயனுள்ள தகவல்களை இன்றிரவு 9.30மணிக்கு வசந்தம் ஒளிவழியில் இடம்பெறும் ‘எதிரொலி’ நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளலாம்.