தண்ணீர் சேமிப்பு திட்டங்களை பள்ளிக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்லும் புத்தாக்க நடவடிக்கைகள் (காணொளி)
தண்ணீர் சேமிப்பு திட்டங்களை பள்ளிக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்லும் புத்தாக்க நடவடிக்கைகள் (காணொளி)
COVID-19 நோய்ப்பரவலால் இவ்வாண்டின் தண்ணீர்ச் சேமிப்பு இயக்கம் வழக்கம்போல் இல்லாமல், சிறிய அளவில் நடத்தப்படுகிறது.
இருந்தாலும் இயக்கத்துக்குக் கைகொடுக்க, 400க்கும் மேற்பட்ட பங்காளித்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
அதில் பள்ளிகளும் இணைந்து, அடுத்தத் தலைமுறையிருனக்குத் தண்ணீரைச் சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கின்றன.
“Water Wednesdays” எனும், தண்ணீர்ச் சேமிப்பைக் கருப்பொருளாகக் கொண்ட நடவடிக்கைகள், மார்ச் மாதம் முழுவதும், புதன்கிழமைகளில், 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைபெறுகின்றன.
பிள்ளைகளிடம் எப்படித் தண்ணீர் திட்டங்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன... ஆராய்ந்து வந்தது 'எதிரொலி' குழு (காணொளி)....