கர்நாடக இசைக்கலைஞர் ராதா விஸ்வநாதன் காலமானர்
பழம்பெரும் கர்நாடக இசைக்கலைஞர் ராதா விஸ்வநாதன் காலமானார். அவருக்கு 83 வயது.
பழம்பெரும் கர்நாடக இசைக்கலைஞர் ராதா விஸ்வநாதன் காலமானார். அவருக்கு 83 வயது.
1934ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிலுள்ள கோபிசெட்டிப்பாளையம் என்ற ஊரில் அவர் பிறந்தார். நேற்றிரவு இந்திய நேரப்படி கிட்டத்தட்ட 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
கர்நாடக சங்கீதத் துறையில் புகழ்பெற்ற அமரர் எம்.எஸ் சுப்புலட்சுமியின் வளர்ப்பு மகளான திருமதி ராதா விஸ்வநாதன், சிறு வயது முதல் இசைத்துறையில் ஈடுபட்டு வந்தார்.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாய் அவர், எம்.எஸ் சுப்புலட்சுமியுடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். 700க்கும் மேற்பட்ட புராதன சங்கீதப் படைப்புகளை எம்.எஸ் சுப்புலட்சுமியிடம் கற்றுக்கொண்ட திருமதி ராதா, தமது மாணவர்களுக்கு அவற்றை போதித்தார்.
நிமோனியாவால் கடந்த சில வாரங்களாகத் திருமதி ராதா விஸ்வநாதன் அவதியுற்றதாக அவருக்கு நெருக்கமானோர் கூறினர்.