பிரதமர் மோடி நாளை இந்திய அமைச்சரவையை விரிவுபடுத்தவுள்ளார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தமது அமைச்சரவையை விரிவுபடுத்தவுள்ளார்.
புது தில்லி, இந்தியா: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தமது அமைச்சரவையை விரிவுபடுத்தவுள்ளார்.
பதவியிலிருந்து விலகிய அமைச்சர்கள் அல்லது வேறு பொறுப்புகளுக்கு மாறிய அமைச்சர்களின் இடங்களை நிரப்புவது அதன் நோக்கம்.
ஆனால் மாற்றங்கள் பெரியளவில் இருக்கமாட்டா என்று ஆளுங்கட்சியினரும் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும் கூறுகின்றனர்.
புதியவர்களில் சிலரை, ஆக அதிக மக்கட்தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து திரு. மோடி தேர்ந்தெடுப்பார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு அங்கு நடைபெறவுள்ள தேர்தலை மனத்திற்கொண்டு பிரதமர் அவ்வாறு செய்யலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட பாரதிய ஜனதா கட்சிக்கு அது ஒரு முக்கிய சோதனையாகவும் கருதப்படுகிறது.