Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரைத்துரையில் சந்தித்த இழிவுகள் - அனுபவங்களை விவரிக்கும் ராதிகா

ராதிகா ஆப்தே, தம்மிடம் நடிகர் ஒருவர்  தவறான முறையில் அணுகியதாகவும், இந்திப் படமொன்றில் நடிக்க மற்றொருவர் தம்மை படுக்கைக்கு அழைத்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். 

வாசிப்புநேரம் -

ராதிகா ஆப்தே, தம்மிடம் நடிகர் ஒருவர் தவறான முறையில் அணுகியதாகவும், இந்திப் படமொன்றில் நடிக்க மற்றொருவர் தம்மை படுக்கைக்கு அழைத்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த கபாலி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். பிரகாஷ்ராஜுடன் டோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் இரவு நேரத்தில் தாம் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக ராதிகா கூறினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் இருப்பதை உணர்ந்து கோபமடைந்ததாக ராதிகா கூறினார். அந்த நடிகரைத் தாம் திட்டி விட்டதாகவும் ராதிகா சொன்னார். அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார். 

இந்தி படமொன்றில் நடிக்க ஒருவர் தம்மை அனுகியபோது, படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என சபித்ததாகவும் ராதிகா கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்