பாம்பைத் தலையணை உறையால் அடக்கிய மாது
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் சன்ஷைன் மெக்கர்ரிக்கு அது ஒரு பொருட்டேயல்ல.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.
ஆனால் சன்ஷைன் மெக்கர்ரிக்கு அது ஒரு பொருட்டேயல்ல.
அமெரிக்காவின் வட கரோலைனா பகுதியில் வசிக்கிறார் சன்ஷைன் மெக்கர்ரி. அவர் ஒரு பச்சைகுத்தும் கலைஞர்.
கடைவீதிக்குச் சென்றுவந்த மெக்கர்ரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் அவர் ஒரு பெரிய பாம்பு நகர்வதைக் கண்டார்.
சற்றும் தயங்காத அவர் தன் பக்கத்தில் இருந்த தலையணை
உறையையெடுத்துப் பாம்பின் வாலை இழுத்து அதனுள் தள்ளினார்.
துள்ளிக்குதித்து வெளியே வர முயன்ற பாம்பைத் தன் வீட்டிற்கு அருகிலுள்ள நதிப்பகுதியில் விடுவித்தார் மெக்கர்ரி.