அலுவலகத்தில் செய்யலாம் உடற்பயிற்சி : பாகம் 1 (கண்கள்)
நாளொன்றுக்கு நாம் எட்டு மணி நேரம் அலுவலகத்தில் கணினி முன்னால் அமர்ந்தவாறு இருக்கிறோம்.
நாளொன்றுக்கு நாம் எட்டு மணி நேரம் அலுவலகத்தில் கணினி முன்னால் அமர்ந்தவாறு இருக்கிறோம்.
கணினியிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் நமது கண்களுக்கு நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
கண்களில் சோர்வு எற்படுவதுடன், அவை வறண்டு போகவும் கூடும்.
இதனால் அடிக்கடி தலைவலி வரும் சாத்தியம் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க எளிமையான வழி உண்டு.
30 நிமிடத்திற்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். தொலைவிலுள்ள இடங்களை சற்று நேரம் பார்த்தால் போதும். அத்துடன் இந்தக் கண் பயிற்சிகளைச் செய்தால் கண் சோர்வு கண்சிமிட்டும் நேரத்தில் பறந்துவிடும்!