'உலகின் சிறந்த திறனாளர்' போட்டியில் லிடியன் நாதஸ்வரம் வெற்றிவாகை
இளம் பியானோ மேதையான லிடியன் நாதஸ்வரம், "உலகின் சிறந்த திறனாளர்" போட்டி நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிகண்டு ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இளம் பியானோ மேதையான லிடியன் நாதஸ்வரம், "உலகின் சிறந்த திறனாளர்" போட்டி நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிகண்டு ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
தமிழ்நாட்டின் சென்னையைச் சேரந்த 13 வயது லிடியன் நாதஸ்வரம் 150 நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தோற்கடித்தார்.
இறுதிச்சுற்றில் தென்கொரியாவைச் சேர்ந்த குக்கிவான் (Kukkiwon) என்னும் Taekwondo வீரரை அவர் தோற்கடித்தார்.
38 நாடுகளைச் சேர்ந்த 50 பேராளர்கள் லிடியனை வெற்றியாளராகத் தேர்ந்தெடுத்தனர்.
லிடியன் இந்தியாவின் இசைத்தூதர் என்று பிரபல திரைப்பட இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது வெற்றியாளருமான திரு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டியுள்ளார்.