Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மகப்பேற்றுக்குப் பிறகு ஏற்படக்கூடிய மனச்சோர்வுக்குப் பாடுவது ஒரு தீர்வு

மகப்பேற்றுக்குப் பிறகு சில தாய்மார்கள் மனச்சோர்வை எதிர்நோக்கக்கூடும்.

வாசிப்புநேரம் -

மகப்பேற்றுக்குப் பிறகு சில தாய்மார்கள் மனச்சோர்வை எதிர்நோக்கக்கூடும்.

அவர்கள் பாட்டு பாடினால், அதனை மேலும் விரைவாகக் குணப்படுத்தலாம் என்று ஆய்வொன்று காட்டுகிறது.

தாய்மார்கள் குழுவாக இணைந்து, தங்கள் கைக்குழுந்தைகளுடன் பாட்டு பாடும் நிகழ்ச்சிகள் ஆய்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்காத தாய்மார்களைக் காட்டிலும், அவற்றில் பங்கேற்ற தாய்மார்கள் கொண்டிருந்த மனச்சோர்வின் நிலை மேம்பட்டிருப்பது தெரியவந்தது.

British Journal of Psychiatry சஞ்சிகையில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

மகப்பேற்றுக்குப் பிறகு மனச்சோர்வை எதிர்நோக்கிய 134 தாய்மார்கள் ஆய்வில் கலந்துகொண்டனர்.

எட்டில் ஒரு பெண் மகப்பேற்றுக்குப் பிந்திய மனச்சோர்வை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்