Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிவப்பு அன்பளிப்பு உறைகளை அளிக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டியது என்ன ?

சீனப் புத்தாண்டில் சிவப்பு அன்பளிப்பு உறைகளைப் பெற்றுக்கொள்ள பிள்ளைகள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பர்.

வாசிப்புநேரம் -
சிவப்பு அன்பளிப்பு உறைகளை அளிக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டியது என்ன ?

( படம்: AFP )

சீனப் புத்தாண்டில் சிவப்பு அன்பளிப்பு உறைகளைப் பெற்றுக்கொள்ள பிள்ளைகள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பர்.

சீனப் புத்தாண்டு என்றாலும் கொண்டாட்டங்களின்போது அவற்றை மற்ற இனத்தவரும் வழங்கக்கூடும்.

அவ்வாறு அன்பளிப்பு வழங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்?

- வழக்கமாகத் திருமணமான தம்பதி மட்டுமே அன்பளிப்பு உறைகளை அளிப்பர். ஆனால், அந்தப் போக்கு மாறி இப்போது சில குடும்பங்களில் திருமணமாகாத பெரியவர்களும் அங்பாவ் உறைகளை வழங்குகின்றனர்.

- செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் அன்பளிப்பாகவும் பிள்ளைகளுக்குப் பெரியவர்கள் அளிக்கும் ஆசியாகவும் அவை கருதப்படுகின்றன.

- சீனப் பாரம்பரியத்தில் நல்லவை இணையாக வரும் என்பது நம்பிக்கை. இதனால், இரட்டைப்படையில் பணத்தை அன்பளிப்பு உறைகளில் வைப்பது முக்கியம்.

- சீன மொழியில் எட்டு என்ற எண்ணின் சொல்லும் செழிப்பு என்ற சொல்லும் கிட்டத்தட்ட ஒன்றாக ஒலிக்கும். இதனால், எட்டு வெள்ளி அளிப்பது பாதுகாப்பானது. நான்கு என்ற எண்ணைக் குறிக்கும் சொல், மரணம் என்ற சொல்லைப் போல் ஒலிக்கும் என்பதால் உறையில் நான்கு வெள்ளியை வைத்து வழங்க வேண்டாம்.

- புதிய உறைகளில் புதிய வெள்ளி நோட்டுகளை வழங்குவது வழக்கம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்