Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தொல்லை தரும் பூச்சிகள்-தவிர்க்க சில வழிகள்

பூச்சிகள்! சிலருக்குப் பயம், சிலருக்கு அருவருப்பு, சிலருக்கு ஒவ்வாமை. எப்படியும் அவற்றை ஒழித்துவிடவேண்டும் என்று ஒரே முடிவாக சிலர் இறங்குவதும் உண்டு. 

வாசிப்புநேரம் -

பூச்சிகள்! சிலருக்குப் பயம், சிலருக்கு அருவருப்பு, சிலருக்கு ஒவ்வாமை. எப்படியும் அவற்றை ஒழித்துவிடவேண்டும் என்று ஒரே முடிவாக சிலர் இறங்குவதும் உண்டு.

சில பூச்சிகளை ஒழித்துவிடலாம். ஆனால் எல்லாவற்றையும் அல்ல. ஆனால் அவற்றைத் தவிர்ப்பது அல்லது அவை தரும் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி?

எறும்பு: பொதுவாக நம் வீடுகளில் தின்பண்டங்களில் எறும்புகள் மொய்ப்பதைப் பார்த்திருப்போம். இவற்றைப் பார்த்தால் உடனே நமக்கு நசுக்கத் தோன்றும். அதை விடுத்து அவை சாரை சாரையாகச் செல்லும் வழியைப் பின்தொடர்ந்து, அவை எங்கிருந்து கிளம்புகின்றன என்று கண்டறியுங்கள். அந்த ஓட்டையை பற்பசை அல்லது அடைக்கும் களிம்பைக் கொண்டு மூடிவிடுங்கள். இல்லையெனில் சிறிது வினிகரைத் தண்ணீரில் கலந்து எறும்பு செல்லும் பாதையில் தெளிக்கலாம்.

கரப்பான்பூச்சி: பலருக்கு அருவருப்பை ஏற்படுத்துபவை கரப்பான்பூச்சிகள். வீட்டில் அதிகம் அட்டை, செய்தித்தாள், புத்தகங்கள் குவிந்து ஒரே இடத்தில் கிடப்பதைத் தவிர்த்துவிடுங்கள். உணவோ, கழிவோ அதிக நேரம் வீட்டில் திறந்தநிலையில் தங்கி இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உணவுப் பொருள் சிந்தினால் உடனே அதைத் துப்புரவு செய்துவிடுங்கள். ஈரமான பொருட்களை, இறுக்கமாக அலமாரியில் போட்டு மூடி வைக்காதீர்கள். கரப்பான்பூச்சிகளுக்குப் பிடித்த இவற்றை தவிர்த்து, கரப்பான்பூச்சிகள் பெருகுவதைக் கட்டுப்படுத்தலாம்.

கரையான்: கரையான்கள் சிறு பூச்சிகள். ஆனால் அவை வேகமாகப் பெருகி, ஒரு முழு மேசையையோ, புத்தகத்தையோகூட அரித்துவிடும். இவை புற்றுகளை உருவாக்கி அதில் வாழும். எனவே புற்று இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதற்கு மருந்திட்டால் மட்டுமே அவற்றை ஒழிக்க முடியும்.

: ஈக்கள் நோய்ப்பரவலுக்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றன. கிருமிகளை எளிதில் பரப்பக்கூடியவை. சிந்தும், சிதறும் உணவுகளை உடனடியாகச் சுத்தம் செய்வது, உணவுகளை அதிக நேரம் திறந்து வைக்காமல் இருப்பது, அழுகும் நிலையில் உள்ள பழங்களை அகற்றுவது. - இவற்றின் மூலம் ஓரளவு ஈக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

மூட்டைப் பூச்சி: பெரும்பாலும் அறைகலன், மெத்தைகளில் தென்படும் எரிச்சலூட்டும் பூச்சிகள் இவை. இவை பலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்தும். மூட்டைப்பூச்சிகளை ஒழிக்க, அவை பெருகியிருக்கும் மெத்தை அல்லது துணிகளை வெந்நீரில் அலச வேண்டும். அவை இருக்கும் அறைகலன், துணிகள் ஆகியவற்றைத் தனியே ஒதுக்கவேண்டும். மருந்துகள் கொண்டு அவற்றை ஒழிக்க வேண்டும். இவை பெருகுவதற்கு முன் ஒழித்துவிடுவது நல்லது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்