Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இனிப்புப் பண்டங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் நன்மை

அதிகமான இனிப்பைச் சாப்பிடக் கூடாது என்று பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் அடிக்கடி போதிப்பார். ஆயினும் பண்டங்களை முற்றிலும் தவிர்ப்பது குழந்தைகளுக்கு நல்லதன்று. 

வாசிப்புநேரம் -

அதிகமான இனிப்பைச் சாப்பிடக் கூடாது என்று பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் அடிக்கடி போதிப்பார். ஆயினும் பண்டங்களை முற்றிலும் தவிர்ப்பது குழந்தைகளுக்கு நல்லதன்று.

சிறார்களுக்கு இனிப்பு பண்டங்களையும், பானங்களையும் தருவதால், அவர்களது நினைவாற்றல் திறன் பெருகும் என்றும், கூர்மையாக கவனிக்கும் திறன் உயரும் என்றும் மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

இதுபற்றி, பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவில், 'மற்ற உறுப்புகளைப் போன்று சக்தியை மூளையானது சேமித்து வைத்துக்கொள்ளாத காரணத்தால், அதனை நேரடியாக இரத்தத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறது. எனவே, ஐந்து முதல் 10 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு பெரியவர்களை விட இரு மடங்கு அளவில் குளுகோஸ் தேவைப்படுகிறது' என்பது தெரியவந்துள்ளது.

இந்த காரணத்தால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு மிதமான அளவில் இனிப்பு பண்டங்களைக் கொடுக்க வேண்டும். மாறாக, அதிக அளவில் கொடுத்தால், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துவதாக, பிரிட்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Glucose உட்கொள்ளும் குழந்தைகளின் நினைவாற்றல் திறன் மிகுதியாக இருப்பது, ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், ஆரோக்கியமான காலை மற்றும் மதிய உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர், ஆய்வாளர்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்