Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இருமல் பிரச்சனைக்குச் சொல்லுங்க பை பை

வெண்டைக்காயை அதிகமாக உட்கொண்டால், எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

வாசிப்புநேரம் -
இருமல் பிரச்சனைக்குச் சொல்லுங்க பை பை

வெண்டைக்காய்

வெண்டைக்காயை அதிகமாக உட்கொண்டால், எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும்,நார்ப்பொருளும் உள்ளன. அதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது.

அதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும்.

வெண்டைக்காய் பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். அதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும்.

தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கவும் வகை செய்யும்.

படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும்.

கணக்கு சரியாக போட வராதவர்கள் தினமும் உணவில் வெண்டைக்காயை சேர்த்துக் கொண்டால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்.

 

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்