இசைக் கலைஞர் அவிச்சி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்
பிரபல இசை, நடனக் கலைஞர் அவிச்சி, கடந்த மாதம் ஓமானில் மாண்டார்.
பிரபல இசை, நடனக் கலைஞர் அவிச்சி, கடந்த மாதம் ஓமானில் மாண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணாடித் துண்டால் தன் உடலைக் காயப்படுத்திக்கொண்டதால் அவர் கடுமையான இரத்தப் போக்கிற்கு ஆளானதாக நம்பப்படுகிறது.
அவரது மரணத்தில் சூது ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்று ஓமான் காவல்துறை முன்னதாகத் தெரிவித்தது.
அவிச்சி மதுபானப் பழக்கத்துக்குத் தான் அடிமைப்பட்டது குறித்தும் வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்துகொள்ளச் சிரமப்பட்டது குறித்தும் நெடுநாட்களாகப் பேசி வந்திருக்கிறார்.