உங்கள் மூளையை மந்தமாக்கும் 5 பழக்கங்கள் என்னென்ன?
ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளைச் செய்வது நமது ஆற்றலைப் பிரதிபலிக்கிறது என்று நாம் நம்பலாம்.
அந்த பழக்கங்கள் என்னென்ன?
1) சரியான தூக்கம் இல்லையென்றால், மூளைக்குப் போதுமான அளவு ஓய்வு கிடைப்பதில்லை.
அது மட்டுமின்றி மனச் சோர்வு வரக்கூடிய சாத்தியத்தையும் அது அதிகரிக்கின்றது.
2) நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கமும் மூளையின் ஆற்றலைக் குறைக்கக்கூடும்.
கவனம், விவேகம், ஞாபக சக்தி ஆகிய தன்மைகளை பாதிக்கும்.
3) வெளிச்சம் இல்லாத அறைகளில் அதிக நேரம் செலவிடுவது மூளையின் அமைப்பை மாற்றியமைக்கிறது.
இதனால் ஞாபக சக்தியும், கற்கும் திறனும் பாதிக்கப்படுகிறது.
4) ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளைச் செய்வது நமது ஆற்றலைப் பிரதிபலிக்கிறது என்று நாம் நம்பலாம்.
அதனால் நாம் எடுக்கும் முடிவுகள் பாதிப்படைகின்றன.
மறதியும் கூடுகிறது.
5) தனிமையில் இருப்பது மூளையின் ஆற்றலுக்கு பாதிப்பு விளைவிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தினமும் மற்றவர்களுடன் பழகாமல் இருப்பது புத்திக் கூர்மையைக் குறைப்பது மட்டுமல்லாமல், மறதி நோய் வரும் வாய்ப்பையும் அது அதிகரிக்கின்றது.