சீனப் புத்தாண்டின்போது என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?
சீனப் புத்தாண்டின்போது என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?
சீனப் புத்தாண்டின்போது, எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதற்குச் சில நம்பிக்கைகள் உள்ளன.
அதைப் பொறுத்து நன்மை, தீமைகள் நடக்கும் என்று சீனர்கள் பொதுவாக நம்புகின்றனர்.
அவற்றில் ஒரு சில..
புத்தாண்டில் அதிர்ஷ்டம் கிடைக்க என்ன செய்யலாம்?
- அங் பாவ் (ang pao) காசு 2,4,6,8 எனும் இரட்டைப்படை எண்களில் (even digits) கொடுக்கவேண்டும். ஒற்றைப்படையில் கொடுப்பது நல்லதல்ல.
- சீன நண்பர்களுக்கு 2 மாண்டரின் (Mandarin) ஆரஞ்சுப் பழங்களை சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கக் கொடுக்கலாம்.
ஒற்றைப்படை எண்ணிக்கையில் பழத்தைக் கொடுக்க வேண்டாம்.
ஜோடியாகக் கொடுப்பதுதான் நல்லது, அதிர்ஷ்டமானது என்பது சீனர்களின் நம்பிக்கை.
- Yusheng எனும் மீன் காய்கறி உணவைச் சாப்பிடுவது சீனப் பாரம்பரியங்களில் பிரபலமானது. அதை மேலே தூக்கிப் போட்டால், அதிர்ஷ்டம் கிட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை.
எவ்வளவு உயரமாக Yusheng மேலே தூக்கிவிடப்படுகிறதோ, அதற்கேற்ப நன்மையும் அதிர்ஷ்டமும் கிட்டும் என்று கூறப்படுகிறது.
செய்யக்கூடாதவை:
- சீனப் புத்தாண்டின் முதல் நாள் அன்று, வீட்டைக் கூட்டக்கூடாது, முடி கழுவக்கூடது என்று சில சீனர்கள் நம்புகின்றனர்.
அப்படிச் செய்தால், இருக்கும் அதிர்ஷ்டத்தை வீட்டைவிட்டு வெளியேற்றுவதுபோல் ஆகிவிடுமாம்.
சீனப் புத்தாண்டிற்கு முன்னதாகவே வீட்டைச் சுத்தம் செய்திருக்கவேண்டும்.
- இறப்பு, அமங்கலமான செய்தி்களைப் பற்றிப் புத்தாண்டின்போது பேசக்கூடாது.
- புத்தாண்டுக் காலத்தில் கடன் வாங்கக்கூடாது என்று சிலர் நம்புகின்றனர்.