Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பட்டுக்கோட்டையார் பற்றிய ஆவணப்படம்

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் சென்னையில் ஞாயிறன்று திரையிடப்படுகிறது.

வாசிப்புநேரம் -

சென்னை, இந்தியா: கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் சென்னையில் ஞாயிறன்று திரையிடப்படுகிறது.  பு.சாரோன் என்பவர் இயக்கியுள்ள 2.30 மணி நேரம் ஓடக்கூடிய ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. 

பட்டுக்கோட்டையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ஆவணப்படத்தின் குறுந் தகட்டினை திரைப்பட இயக்குனர் கே. பாக்கியராஜ் வெளியிட கவிஞர் கல்யாணசுந்தரத்தின் மனைவி கவுரவம்மாள் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.

அதில் ஒரு கட்டமாக சென்னை பெரியார் திடலில் அந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடன் நெருக்கமாக இருந்த சிலர் அவரைப் பற்றிய அரிய தகவல்களை இந்த படத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த பதிவுகளுடன் கவிஞர் இயற்றிய மிகவும் பிரபலமான பாடல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்