கடுமையான முகப் பருக்களால் மனஉளைச்சல் - ஆய்வு
முகப் பருக்களுக்கு சிகிச்சை அளிக்கும் சரும-நிபுணர்களும், மருத்துவர்களும், நோயாளிகளின் மனநிலை குறித்த அறிகுறிகளிலும் கவனம் செலுத்தவேண்டும்.
கடுமையான முகப் பருக்களால் அவதியுறுவோர் மனஉளைச்சலுக்கு ஆளாவதாக அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடும் முகப் பருப் பிரச்சினையை எதிர்நோக்குவோரில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர், பருக்கள் ஏற்பட்ட ஓராண்டு காலத்துக்குள், மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அதனைத் தெரிவித்தனர்.
முகப் பருக்களுக்கு சிகிச்சை அளிக்கும் சரும-நிபுணர்களும், மருத்துவர்களும், நோயாளிகளின் மனநிலை குறித்த அறிகுறிகளிலும் கவனம் செலுத்தவேண்டும்.
நோயாளிகளிடம், மனஉளைச்சல் இருப்பதைக் கண்டுபிடித்தால் மனநல மருத்துவரிடம் அவர்களை அனுப்புமாறும் ஆலோசனை கூறப்பட்டது.