பருமனாக இருக்கும் சிறுமிகளுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்: ஆய்வு
சீரான எடை கொண்ட சிறுமிகளுடன் ஒப்பிடுகையில் உடல் பருமனான சிறுமிகள் மனச்சோர்வால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் 44 விழுக்காடு அதிகமாக உள்ளதாய் ஆய்வு ஒன்று கூறுகிறது.
சீரான எடை கொண்ட சிறுமிகளுடன் ஒப்பிடுகையில் உடல் பருமனான சிறுமிகள் மனச்சோர்வால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் 44 விழுக்காடு அதிகமாக உள்ளதாய் ஆய்வு ஒன்று கூறுகிறது.
கிட்டத்தட்ட 144,000 பேரைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
BMI எனும் உடல் எடை குறியீட்டில் 30ஐ கடந்தவர்கள் மீது ஆய்வு கவனம் செலுத்தியது.
ஆண் பிள்ளைகளின் எடைக்கும் அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கும் தொடர்பு ஏதுமில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.
ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் தங்களது உடல் எடையைப் பார்க்கும் விதம் வேறுபடுகிறது.
எடை கூடுதலாக இருப்பது வலிமையைக் காட்டுவதாக ஆண் பிள்ளைகள் கருதலாம்.
உடல் எடை பற்றிய சமூக எதிர்பார்ப்புகள் பெண் பிள்ளைகளை அதிகமாகப் பாதிக்கக்கூடும்.
அந்த வேறுபாட்டுக்கு அவை காரணங்களாக இருக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.
உலக அளவில் 40 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் 5 வயதுக்குள் உடல் பருமனான நிலையை எட்டுகின்றனர்.
பள்ளியில் பிள்ளைகளின் செயல்திறன், நட்பு போன்றவற்றை மனச்சோர்வு பாதிக்கிறது.
மனச்சோர்வு கொண்ட சிறுவர்கள் போதைப்புழக்கம் போன்ற அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
பருமனான சிறுவர்களை எடை குறைக்க ஊக்குவிக்க விரும்பும் பெற்றோர் அவர்களது தோற்றத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வலியுறுத்துவது சிறந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.