முடி திருத்தும் சேவைகளை நாடமுடியாது... வீட்டிலேயே இருந்தவாறு எப்படி முடியைப் பராமரிப்பது?
கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டத்தின்போது, முடி திருத்தும் சேவைகளை நாடிச் செல்லமுடியாது.
கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டத்தின்போது, முடி திருத்தும் சேவைகளை நாடிச் செல்லமுடியாது.
ஏன் கடையை மூடிவிட்டீர்கள் என்றும், எப்படி பல வாரங்களுக்கு முடி வெட்டாமல் இருப்பது என்றும் வாடிக்கையாளர்கள் பலர் அழைத்துக் கேட்பதாகத் முடி திருத்துனர்கள் கூறுகின்றனர்.
இவ்வேளையில்,மக்கள் எப்படி வீட்டிலேயே இருந்தவாறு தங்கள் முடியைப் பராமரிக்கலாம்? முடி திருத்தும் நிலையங்கள் மீண்டும் திறக்கும் வரை எப்படித் தாக்குப்பிடிப்பது?
Barber'z Paradise எனும் முடி திருத்தும் நிலையத்தின் உரிமையாளர் செல்வராசு மகேந்திரனும் Mythilis Salon & Beauty Parlor-இன் உரிமையாளர் பேகமும் 'செய்தியிடம்' கூறினார்கள்.
- முடிக்கு, எண்ணெய் சார்ந்த பொருள்களை வழக்கமாகப் பயன்படுத்துவோர், இக்காலக்கட்டத்தில் அதைப் பயன்படுத்துவதைச் சற்று தவிர்ப்பது சிறப்பு. தேங்காய் எண்ணெய் போன்றவற்றுக்கு முடியை வளரச்செய்யும் தன்மை உண்டு. அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது, முடி வளரும் வேகத்தைக் குறைக்கும்.
- Styling gel எனப்படும் களிம்பைப் பயன்படுத்தி, முடியை ஒழுங்குபடுத்தலாம். இருப்பினும், அதை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. வெளியே செல்லும்போது மட்டுமே அதைப் பயன்படுத்தி, வீட்டுக்குச் சென்றவுடன் அதைக் கழுவவேண்டும்.
நீளமான முடி உள்ளோர்...
- தற்போதைக்கு தொப்பி அணியலாம்
- 8 முதல் 12 மணி நேரம் வரை நீடிக்கக்கூடிய களிம்பைக் கொண்டு முடியைக் கட்டுக்குள் வைக்கலாம்.
- முடியின் முன் பாகத்திற்குக் களிம்பைப் பயன்படுத்தலாம். முடியின் பின் பாகத்தைக் கட்டி வைக்கலாம்.
பெண்கள் என்ன செய்யலாம்...
- முடியில் கிளைகள் ஏற்பட்டால், அவற்றை Thinning Scissors எனப்படும் கத்தரிக்கோலைக் கொண்டு, அவற்றை அகற்றலாம். இருப்பினும், அந்தக் கத்தரிக்கோலை முடியின் நுனியில் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
- வெப்பமான நாள்களில், முடிக்கு தினமும் Shampoo, Conditioner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
- முடிக்கு எண்ணெய் தேய்த்து, சற்று நேரத்திற்குப் பிறகு முடியைக் கழுவலாம். அதை அவ்வப்போது செய்வது நல்லது.