பொங்கிவரும் உணர்வுகள்...சமாளிக்கலாம் இப்படி!
எழுதிப் பாருங்கள் பேச முடியாத அளவுக்குச் சிலருக்குக் கோபம் வரக்கூடும். புத்தகத்தையும் பேனாவையும் உதவிக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
துன்பம், இன்பம், கோபம், அதிருப்தி என்று உணர்வுகள் பலவிதம்.
அவற்றை எப்படிச் சமாளிப்பது என்பதில்தான் சவாலே அடங்கியுள்ளது.
சிலர் சோகம் என்றால் தூங்கச் சிரமப்படுவர்.
ஒருசிலருக்குக் கவலை ஏற்பட்டால் காரணமின்றிக் கூட கோபம் வரலாம்.
ஒருவரை அமைதியாக இருக்கச் சொல்வது மிகச் சுலபம். ஆனால் பதற்ற நிலையில் நம்மால் பொங்கிவரும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலுமா?
சில எளிய முறைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டால் முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
- முறையாக மூச்சு விடுங்கள்
கோபத்தையும் பதற்றத்தையும் வெகுவிரைவில் குறைக்க உதவக்கூடிய வழி இது.
- சிந்தனைகளுக்குச் சவால் விடுங்கள்.
பிரச்சினை, இருப்பதைவிட பல மடங்கு மோசமானால், என்னென்ன நடக்கலாம் என்ற எண்ணங்கள் மனத்திரையில் ஓடும். அத்தகைய எண்ணங்களுக்கு முதலில் தடுப்புப் போடுங்கள்.
--இது தெளிவான சிந்தனையா? இப்படி இதற்கு முன்னர் நடந்துள்ளதா?
இதன் விளைவை என்னால் சமாளிக்க முடியுமா?'' போன்ற கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிலையும் நீங்கள் ஆராயவேண்டும்.