இந்த நாயின் அன்பிற்கு அளவே இல்லை!
ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் 12 மணிநேரம் தனது உரிமையாளருக்காக காத்துக்கொண்டிருக்கிறது ஒரு நாய்.
ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் 12 மணிநேரம் தனது உரிமையாளருக்காக காத்துக்கொண்டிருக்கிறது ஒரு நாய்.
சீனாவிலுள்ள சொங்சிங் நகரில் அந்நாயும் அதன் உரிமையாளரும் வசிக்கிறார்கள்.
கடந்த 8 ஆண்டுகளாக தனது உரிமையாளர் காலை 7 மணி வேலைக்குச் சென்றதும் அவர் திரும்பும் வரை 'சியொங்சியொங்' என்ற அந்த நாய் காத்துக்கொண்டிருக்கும்.
அதனால் அவ்வட்டாரவாசிகளுக்கு சியொங்சியொங் நன்கு பழக்காமாகிவிட்டது.
அவர்கள் நாயைச் செல்லமாக தட்டிக்கொடுப்பதும் உண்டு.
ஆனால் அவர்கள் கொடுக்கும் எந்த உணவையும் 'சியொங்சியொங்' சாப்பிடாது.
உரிமையாளர் வேலை முடிந்து திரும்பியதும் குதூகலத்துடன் அவர் பின்னே துள்ளிச் செல்லும்.