புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் அடுத்த மாதம் வெளியிடப்படும்
COVID-19 நிலவரத்தால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் வெளியீடு அடுத்த மாதம் இறுதியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 நிலவரத்தால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் வெளியீடு அடுத்த மாதம் இறுதியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"No Time to Die" என்ற அந்தப் படம் செப்டம்பர் 28ஆம் தேதி சிறப்புக் காட்சியாக லண்டனில் வெளியாகும்.
செப்டம்பர் 30ஆம் தேதி முதல், பிரிட்டன் திரையரங்குகளில் படம் வெளியடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
"No Time to Die" திரைப்படம் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது. ஆனால் நோய்த்தொற்று காரணமாக அது தொடர்ந்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். இதற்கு முன் வெளியான படங்கள் மூலம், தயாரிப்பாளர்களுக்கு மில்லியன்கணக்கான டாலர் லாபம் கிடைத்துள்ளது.
"No Time to Die" சுமார் 200 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள டேனியல் கிரெய்க் (Daniel Craig) ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே கடைசிமுறை.
அதனால் திரைப்பட வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.