சிங்கப்பூர்: பொது இடங்களுக்கு முழுமையான பாதுகாப்பு உடையில் செல்லும் பெண்...
சிங்கப்பூரில் பெண் ஒருவர், பொது இடங்களில் விசித்திரமான தோற்றத்தில் காட்சியளித்துள்ளார்.
சிங்கப்பூரில் பெண் ஒருவர்,
பொது இடங்களில் விசித்திரமான தோற்றத்தில் காட்சியளித்துள்ளார்.
அவரைப் படமெடுத்து Instagram பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், ஷரிஃப் என்ற இணையவாசி.
முதல் முறையாக இதைப் பார்க்கிறேன்... அவர் அந்த உடையை எங்கிருந்து வாங்கியிருப்பார்?
என்ற கேள்வியையும் ஷரிஃப் அவரது பதிவுடன் இணைத்திருந்தார்.
பதிவேற்றப்பட்ட படத்தில் அந்தப் பெண்ணின் தலை வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருப்பதைப் போல் இருந்தது.
பெண்ணின் தலையை மூடிய அந்த வெள்ளைத் துணி, காற்றுச் சுத்திகரிப்புக் கருவி ஒன்றுடன் இணைந்திருந்தது போல் தெரிந்தது.
ஷரிஃப் போன்ற மற்ற இணையவாசிகளும் அவரைப் பார்த்திருப்பதாக இணையத்தில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
கடைத்தொகுதிகள், சந்தைகள் போன்ற இடங்களில் அவரைப் போலவே மற்றவர்களையும் பாதுகாப்பு உடைகளில் கண்டதாகச் சிலர் குறிப்பிட்டனர்.
அந்தப் பெண் அணிந்திருக்கும் ஆடை அழகாகவும் இருக்கிறது, 100 விழுக்காடு பாதுகாப்பாகவும் உள்ளது
எனக் கருத்து தெரிவித்தார் மற்றோர் இணையவாசி...
நீங்களும் அவரைப் போலவே பாதுகாப்பு ஆடைகள் அணிந்துகொள்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?