Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களால் உடல் எடை எப்படிக் கூடுகிறது

பதப்படுத்தப்பட்ட (Processed) உணவுப் பொருள்களை உட்கொள்வதால் உடல் பருமன் வேகமாக அதிகரிக்கிறது என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

நியூயார்க்: பதப்படுத்தப்பட்ட (Processed) உணவுப் பொருள்களை உட்கொள்வதால் உடல் பருமன் வேகமாக அதிகரிக்கிறது என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவையான அத்தகைய உணவுப் பொருள்களில், சுத்திகரிக்கப்பட்ட மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அதிகம் உள்ளன. ஆனால் அவற்றில் உடலுக்கு முக்கியமான புரதச்சத்து, விட்டமின், நார்ச்சத்து இருப்பதில்லை.

பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினால், அதை நிறுத்துவது கடினம். மேலும் அது, உடல் எடையை வெகுவாக, வேகமாகக் கூட்டுகிறது.

உருளைக் கிழங்குச் சீவல், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, வெள்ளை ரொட்டி, சீனி சேர்த்த தயிர், சர்க்கரை மிகுந்த குளிர்பானம் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டவர்களின் உடல் எடை அதிகரித்ததாக Cell Metabolism சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவித்தது.

பசியைத் தூண்டும் சுரப்பிநீர் அவ்வகை உணவுகளை உட்கொள்வதால் அதிக அளவில் சுரக்கின்றன. பச்சைக் காய்கறிகள், புதிய மீன், இறைச்சி வகையை உட்கொள்வோருடன் ஒப்பிடுகையில் அவர்களது சுரப்பிநீர் அளவு அதிகரித்திருந்தது.

4 வாரங்கள் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்றவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் உணவு சாப்பிடலாம். ஒரு தரப்பினர் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை மட்டுமே மற்றொரு தரப்பினர் புதிதாக வாங்கப்பட்ட உணவு வகைகளை மட்டுமே சாப்பிட்டனர்.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்ட குழுவினர் நாளுக்கு சுமார் 500 கலோரிகள் அதிகமாக உட்கொண்டனர்.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆரோக்கியமான வகையில் தங்கள் உணவுப் பொருள்களைத் தயாரிக்க, புதிய கண்டுபிடிப்பு தூண்டும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்