Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புதிய Samsung கைத்தொலைபேசி வெளியீடு

Samsung நிறுவனம் அதன் ஆக அண்மைத் திறன்பேசி ரகமான Galaxy S9 கைத்தொலைபேசியை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
புதிய Samsung கைத்தொலைபேசி வெளியீடு

(படம்: CNA)

Samsung நிறுவனம் அதன் ஆக அண்மைத் திறன்பேசி ரகமான Galaxy S9 கைத்தொலைபேசியை வெளியிட்டுள்ளது.

Augmented Reality எனப்படும் மிகை மெய்நிகர்த் தொழில்நுட்ப அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

செயற்கை அறிவாற்றல் சேவைகளையும் அது வழங்குகிறது.

அதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் திறன்பேசியின் கேமராவைப் பயன்படுத்தி, வெளிநாட்டு மொழியில் அமைந்திருக்கும் ஒரு அறிவிப்பை உடனடியாக மொழிமாற்றம் செய்ய இயலும்.

கேமராவை அதை நோக்கிக் காட்டினாலே போதும்.

முன்னைய வெளியீடான S8 ரகத் திறன்பேசியைக் காட்டிலும், மேம்பட்டுள்ள ஒலியும், வேகமும் S9 கொண்டுள்ளது.

சென்ற ஆண்டு Samsung திறன்பேசிகளின் ஒட்டுமொத்த விற்பனை குறைந்த வேளையில், புதிய S9 ரகத் திறன்பேசி வெளியீடு கண்டுள்ளது.

புதிய திறன்பேசிகளை நாட வாடிக்கையாளர்களைத் தூண்டும் புத்தாக்க முயற்சிகளின் தொடர்பில், உலகெங்குமுள்ள திறன்பேசித் தயாரிப்பு நிறுவனங்கள் சென்ற ஆண்டு சிரமத்தை எதிர்நோக்கின.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்