ஆகப்பெரிய மடக்கும் திரையைக் கொண்ட கைத்தொலைபேசியை அறிமுகம் செய்யும் Samsung
Samsung அதன் ஆகப்பெரிய மடக்கும் திரைக் கைத்தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.
Samsung அதன் ஆகப்பெரிய மடக்கும் திரைக் கைத்தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.
Galaxy Z Fold 2 எனும் புதிய கைத்தொலைபேசியின் திரை,
Galaxy Fold -இன் திரையைவிட 12 விழுக்காடு பெரியது.
புதிய திரை முழுமையாக விரிக்கப்பட்ட நிலையில் சுமார் 19 சென்டிமீட்டர் இருக்கும்.
Samsungவெளியிடும் மூன்றாவது மடக்கும் திரை கொண்ட கைத்தொலைபேசி இது.
5G ஆற்றல் கொண்டுள்ள கைத்தொலைபேசியின் விலை சுமார் 2,700 வெள்ளி.
கைத்தொலைபேசி மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. பரந்த கோணத்துடன் தூர இருக்கும் பொருள்களைத் தெளிவாக 'Zoom' செய்து படமெடுக்கும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.
கைத்தொலைபேசியைப் பாதியாக மடக்கியும் பயன்படுத்தலாம்.
கறுப்பு, வெண்கல நிறத்தில் வெளியிடப்படும் கைத்தொலைபேசிகள் சிங்கப்பூரில் எப்போது கிடைக்கும் எனற விவரங்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் அறிவிக்கப்படும்.