சேவைத்துறையில் உள்ளவர்களை அணுகும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
சேவைத்துறையில் உள்ள பாதுகாவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள், தாதியர். அன்றாடம் மக்களுக்குச் சேவையாற்றும் இத்தகைய ஊழியர்கள் சீருடைக்குப் பின்னால் மனிதர்கள் என்பது சில சமயங்களில் மறந்துபோய்விடலாம்.
சேவைத்துறையில் உள்ள பாதுகாவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள், தாதியர். அன்றாடம் மக்களுக்குச் சேவையாற்றும் இத்தகைய ஊழியர்கள் சீருடைக்குப் பின்னால் மனிதர்கள் என்பது சில சமயங்களில் மறந்துபோய்விடலாம்.
சேவைத்துறையில் உள்ளவர்களிடம் பேசும்போது கையாளவேண்டிய சில பழக்கங்கள்...
1) பரிவாகப் பேசவும். பிறருக்குச் சேவை செய்வது அவர்களின் வேலையாக இருக்கலாம். ஆனால், நாம் அவர்களை அதட்டிப் பேசாமல் பணிவாகப் பேசலாம்.
2) அவர்கள் கூறும் கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால், குரலை உயர்த்திப் பேசாமல் அவர்களிடம் உங்கள் வேண்டுகோளை வேறு வழியில் விளக்கலாம்.
3) பொதுச்சேவை ஊழியர்களுக்கு எதிராகத் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்குத் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின்கீழ் அதிகபட்சமாக $5,000 வெள்ளி அபராதத்துடன் ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
4) பாதுகாவலர்களைப் பற்றிப் புகார் செய்ய வேண்டுமானால், அவர்கள் பணிபுரியும் வளாகத்தின் நிர்வாக அதிகாரிகளிடம் அல்லது அவர்களின் நிறுவனத்திடம் நேரடியாகப் புகார் செய்யலாம் என்று பாதுகாப்பு அமைப்புகளின் சங்கம் தெரிவித்துள்ளது.