மனச்சோர்வு குறித்து மனம் திறந்துள்ள பிரபலப் பாடகர் ஜஸ்டின் பெய்பர்
பிரபல ஆங்கிலப் பாடகர் ஜஸ்டின் பெய்பர் தமது மனநலப் பிரச்சினை குறித்த கூடுதலான தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
பிரபல ஆங்கிலப் பாடகர் ஜஸ்டின் பெய்பர் தமது மனநலப் பிரச்சினை குறித்த கூடுதலான தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
அந்தத் தகவல்களை பெய்பர் தமது Instagram பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
தாம் உற்சாகமாக இல்லை என்பதை அதில் ஒப்புக்கொண்ட பெய்பர், தாம் அனுபவிக்கும் பிரச்சினையைப் பகிர்ந்துகொள்வது அதேபோன்ற சிரமத்தை எதிர்நோக்குவோருக்கு நம்பிக்கையைத் தரலாம் என்றார்.
டிப்ளோ, லூயிஸ் போன்சி, மேடிசன் பீர் போன்ற மற்ற நட்சத்திரங்களும், பெய்பரின் விசிறிகளும் அவர் விரைவில் நலம்பெற வேண்டுமெனத் தாங்கள் விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
கடந்த மாதம் Vogue சஞ்சிகையில் மனைவி ஹைலி பால்டுவினுடன் தோன்றிய பெய்பர், மனச்சோர்வால் தாம் எதிநோக்கும் இன்னல்களைப் பற்றிப் பேசியிருந்தார்.
அண்மையில் மனச் சோர்வுக்காக ஒருவார சிகிச்சை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தமது தாயாருக்கு, மனச் சோர்வுப் பிரச்சினை உண்டு என்றும், தமது தந்தைக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத பிரச்சினை உண்டு என்றும் அந்த நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.
ஆகவே, மரபணு ரீதியாகத் தமக்கு மனச் சோர்வு உருவாகியிருக்கக் கூடுமென்றார் பெய்பர்.