Lo hei, hongbao போன்ற சீனப் புத்தாண்டுப் பாரம்பரியத்தின் பின்னணி
சீனப் புத்தாண்டின்போது Yusheng உணவு, Lo hei விருந்து, hongbao என்னும் சிவப்பு அன்பளிப்பு உறைகளை வழங்குவது போன்ற பாரம்பரியங்கள் பின்பற்றப்படுகின்றன. அவற்றின் பின்னணி என்ன?
சீனப் புத்தாண்டின்போது Yusheng உணவு, Lo hei விருந்து, hongbao என்னும் சிவப்பு அன்பளிப்பு உறைகளை வழங்குவது போன்ற பாரம்பரியங்கள் பின்பற்றப்படுகின்றன. அவற்றின் பின்னணி என்ன?
சீனப் புத்தாண்டின்போது Yusheng உணவு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டு விருந்தினர்களுக்குப் பரிமாறப்படுகிறது. அது Lo hei என்றும் அழைக்கப்படுகிறது.
Yusheng உணவில் காரட், வெள்ளை முள்ளங்கி,வெள்ளரிக்காய், சமைக்கப்படாத மீன், எள் விதைகள், இஞ்சி ஆகியவை இடம்பெற்றிருக்கும். சைவமாகவும் Yusheng உணவு தயாரிக்கப்படுகிறது. அதில் சோயா மீன் பயன்படுத்தப்படுகின்றது.
மேசையின் நடுவில் Yusheng உணவுத் தட்டை வைத்து குடும்பத்தினர் கூடி சாப்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் குச்சிகளால் அதிலுள்ளவற்றைத் தூக்கித் தூக்கிக் கலக்குவர்.
அவ்வாறு செய்யும்போது, விருந்தில் கூடிய உறவினர்களுக்கு உரத்த குரலில் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறி மகிழ்வர்.
பாரம்பரியமாக,Yusheng உணவு உயரமாகத் தூக்கிக் கலக்கப்படும். அவ்வாறு செய்வது அந்த ஆண்டில் அதிர்ஷ்டத்தை உயர்த்தும் என்பது சீனர்களின் நம்பிக்கை.
சீனப் புத்தாண்டில் அங்பாவ்(hongbao) என்னும் சிவப்பு அன்பளிப்பு உறைகளை வழங்குவதும் வழக்கம். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தைக் குறிப்பதோடு கெட்ட ஆவிகளை விரட்டியடிப்பதாகவும் கருதப்படுகிறது. அந்தச் சிவப்பு அன்பளிப்பு உறைகளுக்குக் கோரிக்கை விடுப்பது tao hongbao என்று அழைக்கப்படுகின்றது.
- அன்பளிப்பு உறைகளில் "இரட்டைப் படை" (2,6,8....) எண்ணிக்கையில் பணம் வைக்கப்படும்.
- "ஒற்றைப் படை"(1,3,5...) எண்ணிக்கையில் பணம் வைக்கமாட்டார்கள்.
காரணம்?
-அத்தகைய எண்கள் இறுதியஞ்சலியுடன் தொடர்புடையவை என்பது நம்பிக்கை.
- அதேபோல நான்கு வெள்ளியோ, அதன் மடங்குள்ள தொகையோ (4,40,400,444) அன்பளிப்பு உறையில் வைக்கமாட்டார்கள்.
- நான்கு என்ற எண்ணின் சீன உச்சரிப்பு "மரணம்" என்பதைக் குறிப்பது அதற்குக் காரணம்.