உடலில் ஏற்படும் கட்டியைப் போக்குவது எப்படி?
உடலில் ஏற்படும் கட்டியும் பருக்களும் பார்க்க ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் அவற்றிற்கு இடையே வேறுபாடு உண்டு.
உடலில் ஏற்படும் கட்டியும் பருக்களும் பார்க்க ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் அவற்றிற்கு இடையே வேறுபாடு உண்டு.
கிருமி, எண்ணெய், மாண்ட தோல் உயிரணுக்கள் தோலின் மேற்புறத்தை மூடிக்கொள்வதால் பருக்கள் உண்டாகின்றன.
ஆனால் கட்டிகள் ஏற்படுவதோ கிருமித்தொற்றால்...
பருக்களைக் காட்டிலும் அவை பெரும்பாலும் கூடுதல் வலியை ஏற்படுத்தும்.
அவற்றை எப்படிப் போக்குவது?
1. கட்டியை உடைக்கவோ, நசுக்கவோ முயலாதீர்கள்
இவ்வாறு செய்வதால் கட்டியினுள் இருக்கும் கிருமி இன்னும் ஆழமாகப் புதையும்.
2. வெதுவெதுப்பான தண்ணீரில் ஈரத் துணியால் ஒத்தடம் இடுங்கள்
கட்டியால் ஏற்படும் வலியைத் தணிக்க இது உதவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் கட்டியில் சிக்கிக்கொண்டிருக்கும் சீழ் தோலின் மேற்பகுதிக்கு வரும்.
சுமார் 10 நாட்களில் அந்தக் கட்டி வெடித்து உள்ளே இருக்கும் சீழ் வெளியே கசியத் தொடங்கும்.
3. சீழ் கசியத் தொடங்கிய கட்டியைக் கிருமிநாசினித் தன்மை கொண்ட சோப் கொண்டு கழுவ வேண்டும்