மாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது?
தைப் பொங்கலின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவர்களுக்கு மாடுகள் உறுதுணையாக விளங்குகின்றன.
தைப் பொங்கலின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவர்களுக்கு மாடுகள் உறுதுணையாக விளங்குகின்றன.
மாடுகளைப் பெரிதும் சார்ந்துள்ள உழவர்களுக்கு மாடுகளின் பங்கு இன்றியமையாதது. எனவே அந்நாளில் மாடுகளை நினைவுகூர்ந்து அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
உழவனுக்கு உற்றதுணையாக இருக்கும் கால்நடைகளும் இன்று போற்றப்படுகின்றன. விவசாயிகள் உழவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகளைச் சுத்தம் செய்வர்.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கிளைவ் ஸ்ட்ரீட்டில் இன்று மாலை 4 மணியளவில் மாடுகளுக்கு மரியாதை செய்யப்படும்.