முகத்தை மறைக்கும் முகக்கவசங்கள்...ஆனால் ஒப்பனைக்கு இன்னமும் இடமுண்டு...
COVID-19 சூழலுக்கு முன்னர், பெண்கள் அலங்காரம் செய்துகொள்வதற்கு எடுக்கும் நேரத்தில் பெரும்பகுதி, முக ஒப்பனைக்குச் சென்றிருக்கலாம்.
COVID-19 சூழலுக்கு முன்னர், பெண்கள் அலங்காரம் செய்துகொள்வதற்கு எடுக்கும் நேரத்தில் பெரும்பகுதி, முக ஒப்பனைக்குச் சென்றிருக்கலாம்.
முகக்கவசங்கள் அணிவதைக் கட்டாயமாக்கிய பின்னர், முன்புபோல் முக ஒப்பனையைச் செய்ய வாய்ப்பில்லை.
இந்நிலையில், மக்கள் தங்கள் முக ஒப்பனையில் என்னென்ன மாற்றங்களைச் செய்து வருகின்றனர்?
முகத்தில் பருக்கள் ஏற்படுவதால், நான் முக ஒப்பனையை நிறுத்திவிட்டேன். நான் பவுடரை (Powder) மட்டுமே பூசுகிறேன்.
- திவ்யா, 24, நிதி ஆலோசகர்
நிகழ்ச்சிகளுக்குச் செல்லவேண்டியிருந்தால் மட்டுமே ஒப்பனை செய்துகொள்வேன். இருப்பினும் முன்பு பயன்படுத்திய அளவுடன் ஒப்பிடுகையில் ஒப்பனை, சற்று குறைவாக இருக்கும். ஈரப்பதம் கொண்ட பொருள்களை அதிகம் பயன்படுத்துவேன்
- ஜெயந்தி, 35, உணவக உரிமையாளர்
முகத்தில் ஒப்பனை செய்யும்போது அது முகக்கவசம் மீது படிந்துவிடுகிறது. கண்களுக்கு மட்டும் Eye Liner-உம் இமைகளுக்குச் சிறிது ஒப்பனையும் செய்வேன்.
- பல்கீஸ், 25, நிதித்துறை ஊழியர்
நான் தாதியாக வேலைசெய்வதால் முகக்கவசத்தை நீண்டநேரத்திற்கு அணியவேண்டும். ஒப்பனை செய்தால் தோலில் தடிப்புகள் ஏற்படுகின்றன.
- தர்ஷினி, 35, தாதி
முகக்கவசத்தை அணியும்போது ஒவ்வாமை, பருக்கள் ஆகியவை ஏற்பட்டால் கண்களுக்கு மட்டும் ஒப்பனை செய்துகொள்ளலாம் என்கிறார், ஒப்பனைக் கலைஞர் காயத்திரி.
COVID-19 சூழலில் முக ஒப்பனை பாணிகளில் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன?
அவர் கூறும் பரிந்துரைகள்..
முகக்கவசத்தை அணியும்போது, கண்கள் மீதே முதலில் கவனம் செலுத்தப்படுகிறது.
இமைகளுக்கு Eye shadow, கண்களுக்கு Eyeliner, Mascara ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் புருவத்தைத் திருத்துவதும் முக்கியம்.
- Eye liner-ஐ பல்வேறு வண்ணங்களில் பயன்படுத்தலாம்.
எந்தவொரு உதட்டுச் சாயத்திற்கும் பொருந்தும் வகையில், முன்னர் கறுப்பு Eye liner மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
முகக்கவசத்தை அணிவதால் உதட்டுச் சாயத்திற்கு இடமில்லை.
- கண் இமைகளுக்கு மினுமினுக்கும் (shimmer) Eyshadow-ஐப் பயன்படுத்தலாம்.
அதை இமையின் நடுப்பகுதியில் தடவினால், கண்களுக்குக் கவர்ச்சியைக் கொடுக்கும்.
- கண் புருவத்திற்கு வண்ணம் சேர்க்கலாம்.
சிகை அலங்காரம் மீது மக்கள் கவனம் செலுத்துவது சிறப்பு.
தலைமுடியைக் காய வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவியைக் (Hair dryer)கொண்டு விருப்பமான சிகை அலங்காரத்தைச் செய்துகொள்ளலாம்.
வேலையிடங்களுக்குச் செல்வோர்...
- தங்கள் முகத்தில் Nude எனும் தோல் நிறத்திற்கு ஏற்ற ஒப்பனையைச் செய்துகொள்ளலாம்.
- ஈரப்பதம் கொண்ட Foundation-ஐப் போன்று, சருமத்திற்குத் தகுந்த சில ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தலாம். அதிகமான ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தினால், அது 'pores' எனும் துளைகளை அடைக்கலாம்.
சருமத்தின் ஈரப்பதத்தை உறுதிசெய்யவேண்டும்
- முகக்கவசத்தை அணிந்தாலும் முகத்தின் ஈரப்பதத்தை உறுதிசெய்வது முக்கியம். 'Moisturizers' எனும் முகப் பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தி சருமத்தின் ஈரப்பதத்தைச் சீராக்கலாம்.
- தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும்.
முகக்கவசத்தை அணிந்தபோதிலும், நமது தோற்றம் முக்கியம் என்று கூறுகிறார், காயத்திரி.