காலஞ்சென்ற பாடகர் மலேசியா வாசுதேவனின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இணையம் வழி இசைநிகழ்ச்சி
காலஞ்சென்ற பாடகர் மலேசியா வாசுதேவனின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இணைய வழி இசைநிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற பாடகர் மலேசியா வாசுதேவனின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இணைய வழி இசைநிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் திங்கள்கிழமை (ஜூன் 15) இரவு 9.30 மணிக்கு இசைநிகழ்ச்சி YouTube வழி ஒளிபரப்பாகவுள்ளது.
தமிழ்த் திரையுலகில் 8,000க்கும் மேற்பட்ட, நினைவிலிருந்து நீங்காத பாடல்களைப் பாடியவர் மலேசியா வாசுதேவன்.
1970களில் தம் இசைப்பயணத்தைத் தொடங்கிய அவர், 2011இல் காலமானார்.
அவரின் மகன் யுகேந்திரன் வாசுதேவனின் ஏற்பாட்டில் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் SPB சரண், விஜய் யேசுதாஸ், ஹரிணி போன்ற பிரபல இசைக் கலைஞர்களும் நேரடியாகப் பங்கேற்கவுள்ளனர்.
திரு. வாசுதேவன் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய பங்கிற்கு நன்றி கூறும் வகையில் எண்பதுகள் காலக்கட்டத்தைச் சேர்ந்த நடிகர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் காணொளிவழி வாழ்த்துகளையும் கூறவுள்ளனர்.
இசைநிகழ்ச்சி, https://www.youtube.com/yugendranvasudevan என்ற பக்கம் வழியாக ஒளிபரப்பப்படும்.