பட்டு, ஜிகினா, பளபளப்பு- உடைகளுக்கு அழகு சேர்க்கும் முகக் கவசங்கள்
COVID-19 நோய்த்தொற்றுச் சூழலில் உலகளவில் அனைவருக்கும் பொதுவாகியிருக்கும் ஒரு பொருள் முகககவசம்!
COVID-19 நோய்த்தொற்றுச் சூழலில் உலகளவில் அனைவருக்கும் பொதுவாகியிருக்கும் ஒரு பொருள் முகககவசம்!
நோய்ப்பரவல் 2 மாதம், 4 மாதம், 6 மாதம் என்று தொடர்ந்துகொண்டே இருக்க, சுகாதாரம், பாதுகாப்பு என்பதைத் தாண்டி முகக்கவசத்தை அன்றாட வாழ்க்கையின் அங்கமாக்கிக் கொண்டோம்.
இப்போது அவற்றை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லத் தயாராய் இருக்கிறது உலகம்.
ஆம்! ஆடையுடன் பொருந்திப்போகும் நவநாகரிகமாகிவிட்டது முகக்கவசம்.
அப்படி இருக்கும்போது, முகக் கவசங்கள் வெறும் நீலம், கறுப்பு ஆகிய நிறங்களில் இல்லாமல் அன்றாடம் அணியும் ஆடைகளுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் என்று பலர் எண்ணுகின்றனர்.
பட்டு, sequins என்று முகக் கவசங்கள் பல்வேறு விதங்களிலும், நிறங்களிலும் வந்துள்ளன.
என்னென்ன வகை, எதைப் பார்த்து வாங்கவேண்டும்?
முகக் கவசம் வாங்கும்போது கேட்டுக்கொள்ளவேண்டியவை...
- அணியும்போது சௌகரியமாக உள்ளதா?
- துணி நல்ல தரமானதா?
- தோற்றத்துக்கும், வெவ்வேறு உடைக்கும் பொருத்தமாக இருக்குமா?
- ஈரம் எளிதில் தென்படுமா?
- சரியான அளவில் உள்ளதா?
- எத்தனை முறை வரை அணியலாம்?
- எத்தனை படிவங்கள் உள்ளன?
அதிகமான படிவங்கள் இருந்தால், சுவாசிக்க வசதியாக இல்லாமல் போகலாம்.