மாட்டுப் பொங்கலின் மகத்துவம்
தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலில் மாடுகளின் பங்கு இன்றியமையாதது.
தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலில் மாடுகளின் பங்கு இன்றியமையாதது. எனவே அந்நாளில் மாடுகளை நினைவுகூர்ந்து அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாடுகள் மட்டுமின்றி உழவனுக்கு உற்றதுணையாக இருக்கும் கால்நடைகளைப் போற்றும் நன்னாள்.
உழவிற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளை விவசாயிகள் தூய்மைப்படுத்துவர்.
ஏரோட்டும் உழவர்களுக்கு உயிர்நாடியாக மாடுகள் விளங்குகின்றன.
இவ்வாண்டின் பொங்கல் ஒளியூட்டு அலங்காரத்திலும் அந்த அம்சத்தைக் காணலாம்.