வலி நிவாரண மாத்திரைகள்... அவற்றைப் பற்றிய சில தவறான எண்ணங்கள்
தலைவலி, கால்வலி, காய்ச்சல், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய உடல்வலி என எல்லாவித வலிக்கும்
தலைவலி, கால்வலி, காய்ச்சல், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய உடல்வலி என எல்லாவித வலிக்கும் Painkillers எனப்படும் வலி நிவாரண மாத்திரைகளை மக்கள் உட்கொள்கின்றனர்.
Paracetamol, ibuprofen, aspirin, naproxen ஆகிய எளிதில் கிடைக்கக்கூடிய மாத்திரைகள் அந்த வகையைச் சேர்ந்தவையே.
எளிதாகக் கிடைப்பதால் அவற்றைச் சிலர் எளிதாகவே எடுத்துக்கொள்கின்றனர்.
அவற்றைப் பற்றி நிலவும் சில தவறான கருத்துகள்:
வலி மாத்திரைகளை மற்ற மருந்துகளுடன் சேர்த்து உட்கொள்ளலாமா?
- அவ்வாறு செய்வதால், தெரியாமல் அளவுக்கு அதிகமான வலி மாத்திரைகளை உட்கொள்ள நேரிடலாம்.
- வெவ்வேறு இடங்களிலிருந்து மருந்துகளைப் பெறும்போது அவ்வாறு நடக்கலாம்.
அதிகமான மாத்திரைகளை உட்கொண்டால், வலி உடனடியாகக் குறைந்துவிடுமா?