வெப்பமயமாதலால் செடிகள் குறைவான கரியமில வாயுவை உறிஞ்சுகின்றன - ஆய்வு
உலக வெப்பமயமாதலால் செடிகள் குறைவான கரியமில வாயுவை உறிஞ்சுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலக வெப்பமயமாதலால் செடிகள் குறைவான கரியமில வாயுவை உறிஞ்சுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்கள் காற்று மண்டலத்தில் வெளியேற்றும் வெப்ப வாயுக்களில் சுமார் கால்வாசியைச் செடிகள் உறிஞ்சுகின்றன. பருவநிலை மாற்றத்தால் எழக்கூடிய மோசமான பாதிப்புகளைத் தவிர்க்க அது உதவுகிறது.
கரியமில வாயு அதிகரிக்கும்போது, செடிகள் அதனை அதிக அளவில் உறிஞ்சுவது உகந்த நிலை. அது செடிகளின் வளர்ச்சிக்கு உதவும்.
ஆனால் உலகம் வெப்பமடைவதால் செடிகள் குறைவான கரியமில வாயுவை உறிஞ்சுவதாக Nature சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.