இந்தியாவில் ஐஃபோன் உற்பத்தியைத் தொடங்கவுள்ளது ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு(2017) இந்தியாவில் ஐஃபோன் உற்பத்தியைத் துவங்கவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு(2017) இந்தியாவில் ஐஃபோன் உற்பத்தியைத் துவங்கவுள்ளது.
சீனாவில் விற்பனை மெதுவடைந்துவருவதால், அந்த நிறுவனம் இந்தியாவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதனை உறுதிப்படுத்தாவிட்டாலும், இந்த வாரம் இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு இருப்பதாகவும் அவர்கள் ஏப்ரல் (2017) மாத இறுதியில் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியைத் தொடங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கர்நாடக மாநிலத்தின் தகவல், உயிர்தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்கா கார்க் தெரிவித்தார்.