Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

தனிமை சில நேரங்களில் இனிமை

புதிய காற்றைச் சுவாசித்தபோது கிடைத்த மனநிறைவுக்கும் அளவில்லை.

வாசிப்புநேரம் -
தனிமை சில நேரங்களில் இனிமை

(படம்:துர்கைதாஷினி)

விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்வது என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒன்றுதான்.

பொதுவாக விடுமுறைக்குச் செல்வோர், குடும்பத்தார் அல்லது நண்பர்களை அழைத்துச்செல்வது வழக்கம்.

இருப்பினும் தற்போது அதிகமானோர் தனியாக வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவருவதாக நான் சந்தித்த முகவர்கள் கூறினர்.

முதன்முதலில் தனியாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது பல அச்சங்கள்எழுவது இயல்புதான்.

எனக்கும் அப்படித்தான்.

சில கேள்விகள் மனத்தில் எழந்தன...

எந்த நாட்டுக்குச் செல்வது?

பயணம் மேற்கொள்ளும் நாடு பாதுகாப்பானதா? 

விசா தேவையா? தேவையென்றால் எப்படிப் பெறுவது?

விமான நுழைவுச்சீட்டுகளை எவ்வாறு வாங்குவது?

ஹோட்டல்களுக்கு எவ்வாறு பதிவு செய்வது?

வானிலை எப்படி இருக்கும்? 

போக்குவரத்து வசதிகள் எப்படி?

எந்த மாதிரியான உணவுவகைகள் கிடைக்கும்?

தனியாகத் திட்டமிட்டுச் செல்வோர் உண்டு.

எனக்கு யாரேனும் யோசனை சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

தனியாகப் பயணம் மேற்கொள்வோரின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்குப் பயண முகவர்கள் உள்ளனர் என்பது தெரியவந்தது.

அதிகமான சுற்றுப்பயணிகள் செல்லும் நாடுகளின் பட்டியல் முகவர்களிடம் இருக்கிறது. 

ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கக்கூடிய அனுபவம் உட்பட பல்வேறு தகவல்களையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

அண்மையில் சிட்னி பயணத்துக்கான திட்டமிடுதலைப் பயண முகவரிடம் ஒப்படைத்தேன். 

அதன் காரணமாக எந்தச் சிரமமுமின்றி பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ள முடிந்தது.

(படம்:துர்கைதாஷினி)

சுதந்திரமாக இருக்க விரும்பினேன். அதனால் யாரையும் என்னுடன் அழைத்துச் செல்லவில்லை. 

பலரோடு சென்றிருந்தால் அந்தப் பயணத்தை எனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடிந்திருக்காது என்று இப்போது தோன்றுகிறது.

(படம்:துர்கைதாஷினி)

ஆஸ்திரேலியப் பயணத்தில் புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும் முடிந்தது.

தலைநகர் கான்பரா முதல் Bondi கடற்கரை, Blue Mountains, Opera House, Harbour Bridge போன்ற இடங்களுக்குச் சென்றேன். 

(படம்:துர்கைதாஷினி)

புதிய சூழல். புதிய அனுபவம். புதிய நட்பு.

எங்கும் காணக் கிடைக்காத பல இயற்கைக் காட்சிகள்.
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

புதிய காற்றைச் சுவாசித்தபோது கிடைத்த மனநிறைவுக்கும் அளவில்லை.

இந்தப் பயணம் வாழ்க்கையில் உற்சாகத்தோடு செயல்பட உதவியது என்றால் அது மிகையில்லை.

(படம்:துர்கைதாஷினி)

மற்ற நாடுகளையும் தனியாகவே சென்றுபார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்தப் பயணம் எனக்குள் தூண்டிவிட்டுள்ளது. 

அடுத்த பயணத்துக்கும் இப்போதே தயாராகிவிட்டேன். 

வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு புதிய நாட்டுக்குத் தனியாகச் சென்று பார்வையிடுங்களேன்.

தனிமையும் சில நேரங்களில் இனிமைதான்...

அன்புடன்
துர்கை தர்ஷிணி


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்