சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆடவர்கள் கைது
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆடவர்களைக் கடலோரக் காவல்துறை நேற்று இரவு கைது செய்தது.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆடவர்களைக் கடலோரக் காவல்துறை நேற்று இரவு கைது செய்தது.
வேகமாகச் செல்லும் படகில் சிங்கப்பூரை நோக்கி அந்த 10 பேர் நேற்று வந்து கொண்டிருந்ததாகக் காவல்துறை இன்று கூறியது.
அவர்கள் 20 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
துவாஸ் கரையோரமாக வந்த படகு, பின்னர் சிங்கப்பூர்க் கடல் பகுதியிலிருந்து வெளியேற முயன்றது.
ஆனால், படகைத் தேட கடல், நிலப் பாதுகாப்புப் படைகளை காவல்துறையினர் ஈடுபடுத்தினர்.
இடைமறிக்கப்பட்ட படகில் இருந்த 10 பேர் பின்னர் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.