கண்டுபிடிக்கப்பட்ட 11-வயது வகுப்புத் தோழர்கள்
காணாமற்போன 11-வயது மாணவர்கள் இருவர், 24 மணி நேரத்திற்குப் பிறகு நேற்றிரவு (ஜனவரி 19) சுமார் 9.45 மணிக்கு யீஷூனில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
காணாமற்போன 11-வயது மாணவர்கள் இருவர், 24 மணி நேரத்திற்குப் பிறகு நேற்றிரவு (ஜனவரி 19) சுமார் 9.45 மணிக்கு யீஷூனில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்கள் என நம்பப்படுகிறது.
வியாழக்கிழமை மாலை செங்காங்கில் அவர்கள் காணாமற்போயினர்.
அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் எந்தக் குற்றச்செயல் சம்பவத்திற்கும் அவர்கள் ஆளாகவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.