Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையவிருக்கும் 8 தொடக்கக் கல்லூரிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன

சிங்கப்பூரில், அடுத்த ஆண்டு இணையவிருக்கும் 8 தொடக்கக் கல்லூரிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
இணையவிருக்கும் 8 தொடக்கக் கல்லூரிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன

(படம்: Channel NewsAsia)

சிங்கப்பூரில், அடுத்த ஆண்டு இணையவிருக்கும் 8 தொடக்கக் கல்லூரிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இணையவிருக்கும் இரண்டு தொடக்கக் கல்லூரிகளின் பெயர்களும் இணைக்கப்படும்.

பழைய தொடக்கக் கல்லூரியின் பெயர் முதலில் இடம்பெறும்.

பழைய தொடக்கக் கல்லூரியின் பெயரை முதலில் இடம்பெறச் செய்வது, அதன் வரலாற்றைப் பிரதிபலிக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி,
யீஷுன் இன்னோவா தொடக்கக் கல்லூரி,
தம்பனீஸ் மரிடியன் தொடக்கக் கல்லூரி,
ஜூரோங் பையனியர் தொடக்கக் கல்லூரி ஆகியவை புதிய பெயர்கள்.

இணைக்கப்படும் தொடக்கக் கல்லூரிகளுக்கான முதல்வர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் முதல்வராக இருக்கும் திரு மனோகரன் சுப்பையா, புதிய அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரிக்குத் தலைமை வகிப்பார்.

ஒவ்வொரு பள்ளிக்கும் தனி அடையாளம் உண்டு.

தொடக்கக் கல்லூரிகள் இணையும்போது, அந்த அடையாளத்தில் மாற்றம் ஏற்படாது என்கிறார், திரு மனோகரன்.

தொடக்கக் கல்லூரிகள் இணையும்போது இரு பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் புதிய வாய்ப்புகள் காத்திருப்பதாகச் சொன்னார், திரு மனோகரன்.

தொடக்கக் கல்லூரிகள் இணைக்கப்படும் இடைக்காலத்தில், கூடுதல் ஆதரவும் நிலைத்தன்மையும் வழங்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, புதிய தொடக்கக் கல்லூரிகளுக்கான முதல்வர்கள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சு கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்