Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாத்தோக்கில் சுவர் சரிந்து விழுந்ததில் 5 பேர் காயம்

காலை சுமார் 11 மணியளவில் உதவி தேவைப்படுவதாய் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

வாசிப்புநேரம் -

புக்கிட் பாத்தோக் தொழிலியல் கட்டடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து ஊழியர்களுக்குக் காயமேற்பட்டுள்ளது.

20 புக்கிட் பாத்தோக் கிரெஸண்ட்டில் உள்ள கட்டடத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் வளாகத்துக்குள் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

காலை சுமார் 11 மணிக்கு உதவிக்கு அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அங்கு சென்ற அதிகாரிகள் தீச்சம்பவம் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

காலை அந்தக் கட்டடத்தில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக அங்கிருந்தோர் கூறினர். சிலர் பக்கத்துக் கட்டடத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்