புக்கிட் பாத்தோக்கில் தலைகீழாகக் கவிழ்ந்த கார்
புக்கிட் பாத்தோக்கில் நடந்த கார் விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
புக்கிட் பாத்தோக்கில் நடந்த கார் விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
புக்கிட் பாத்தோக் அவென்யூ மூன்றில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்தது.
சம்பவம் குறித்து நேற்றிரவு பத்தே முக்கால் மணிக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
காயமடைந்த இருவரும் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இருவரும் சுயநினைவுடன் இருந்ததாக சேனல் நியூஸ் ஏஷியா அறிகிறது.
ஒரு வெள்ளைநிறக் காரின் முன்புறமும் கண்ணாடியும் சேதமடைந்ததாகக் காயமடைந்த ஒருவரின் சகோதரி Facebook இல் தெரிவித்தார்.
வெள்ளைக் காருக்கு முன்னால் சென்ற சிவப்புநிறக் கார் விபத்தைத் தவிர்க்க முயன்று திடீரென்று நிலைதடுமாறியதாகத் தெரிகிறது.
தமது சகோதரர் உடனே காரை நிறுத்தமுடியாமல் சிரமப்பட்டார்; ஈரமாக இருந்த சாலையில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.